காதல் திருமணம்....!
மீனுக்கும் தூண்டிலுக்கும்
காதல்
திருமணம்....!
மீனின் பெற்றோருக்குத் தெரியாமல்.....!
திருமணம் ஆன
மகிழ்ச்சியில்...
பிறந்த வீடாம் கடலிலிருந்து
புகுந்த வீடாம் கரைக்கு
வந்தால்...
மீனுக்கு அதிர்ச்சி.....!
காரணம்......?
கரையில் தன்னைப் போல்
பல மீன்கள்.....
வாழாவெட்டியாய்......!
துணையாம் தூண்டிலைக்
கண்டது மீன்.....
தூண்டில் மீண்டும்
சென்றது
கடலுக்கு......
மறுமணம் செய்ய..........!
.............................................தாமரையான் :)
2 comments:
nice thought ya.... simply superb
wow.epdi da....nice 1...
Post a Comment