'தன்'னிறைவு
ஓட்டினிலே.....
வெள்ளியை
உருக்கிக் காய்ச்சிய
ஓடையாய்
ஒழுகிய மழைத் துளி.....
மின்னியது;
ஏழையின் கண்ணுக்கு.....
மலை இல்லா
குற்றாலமாய்......!
------------------------------------------- தாமரையான்
தமிழைத் தூய்மைப் படுத்த வாரீர். மொழிக்கலப்படம் தவிர்ப்போம். பிறமொழி மாசு களைவோம். மறந்தவருக்கு நினைவூட்டுவோம். மறந்ததை அறிந்து கொள்வோம். மறைமலை அடிகளின் பணியினைத் தொடர்வோம்.