பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, September 1, 2009

நீ என் தின்னுயிர் கண்ணம்மா .....!




காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன், - அமு தூற்றினை யொத்த இதழ்களும்- நில ஊறித் ததும்பும் விழிகளும், - பத்து மாற்றுப் பொன் ஒத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்- எனை வேற்று நினைவின்றித் தேற்றியே- இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே - இந்தக் (காற்று வெளியிடைக்)

நீ என் தின்னுயிர் கண்ணம்மா -எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் -துயர் போயின,போயின துன்பங்கள்- நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினி லேயமு தூறுதே - கண்ணம் மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே -உயிர்த் தீ யினி லேவளர்சோதியே - என்றன் சிந்தனையே என்றன் சித்தமே ! இந்தக் (காற்று வெளியிடைக்)

- மகாகவி !