என்னென்று நான் உரைப்பேன்...???!!!
அது ஒரு
இளவேனிர்க் காலம்...
ஒரு தேநீர்க் கடையில்
எதிரெதிர் திசையில்
அமர்ந்திருந்தோம்
நானும்
அவளும்...!!!
அந்த
குளிரூட்டப்பட்ட அறையில்
அவள்
இரு கைகள்
மட்டும் கதகதப்பாய்
குவிந்திருந்தது
என் உள்ளங்கையில்...!!!
அவள் பார்வைகள்
மட்டும்
பலமணி நேரமாய்
பரிமாறிக்
கொண்டிருந்த
பால் பார்வையை
அந்தக் கைகளில்
ஏந்திக் கொண்டிருந்தேன்...!!!
மகிழ்ச்சியை மொத்தமாய்
குத்தகை
எடுத்திருந்தாலும்
சிக்கனமாய்
சிரித்த
அவள் உதடுகள்
இன்பத் தேயிலை தூளை
தூவிய வண்ணம்
இருந்தது
அந்த பார்வைப் பாலில்...
எல்லாம் சரி...
"சர்க்கரை...???"
என்றேன்...
சட்டென்று சிரித்து
சர்க்கரையையும்
சேர்த்தாள்...!!!
இப்படியொரு
காதல் தேநீரை
நான் பருகிக் கொண்டிருக்க
வேலைக்காரன்
வந்து
வினவினான்
"என்ன வேண்டும் என்று...!!!"
என்னென்று நான் உரைப்பேன்...???!!! - தாமரையான் :D
1 comment:
Sooperrrrr :) :)
Post a Comment