சொல்லடி சிவசக்தி!
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி சிவசக்தி! - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்தது விட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி,சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நிதம்
நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்!
தசையினைத் தீ சுடினும் - சிவா
சக்தியைப் பாடுநல் லகன்கேட்டன்,
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுள்ளதோ?
No comments:
Post a Comment