பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Sunday, September 20, 2009

சொல்லடி சிவசக்தி!





நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி! - எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்தது விட்டாய்,

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி,சிவசக்தி! - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நிதம்

நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்!

தசையினைத் தீ சுடினும் - சிவா

சக்தியைப் பாடுநல் லகன்கேட்டன்,

அசைவறு மதிகேட்டேன்; - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுள்ளதோ?





- மகாகவி . பாரதி

No comments: