வேண்டுவன.............!

மனதி லுறுதி வேண்டும் -
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் -
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் -
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும் -
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும் -
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்..............!
- மகாகவி
No comments:
Post a Comment