பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Wednesday, June 30, 2010

சுட்ட மழை...!



வறட்சியை மட்டும் 
குத்தகையாய் 
கொண்ட கறுப்புப் பிரதேசம்...!

சூரியன் புதையுண்ட 
பூமி போல் 
கொதித்த தட்ப வெப்பம்...!

வறண்டு துவண்டு 
போன 
உயிர் நாள நதிகள்...!

அறுவடை செய்ய 
ஏதுமின்றி 
உறங்கும் விளைநிலங்கள்...!

வறட்சியின் ஆட்சியில் 
அழிவின் 
வாழ்வு அமோகம் அங்கு...!

இருப்பினும் 
திடீரென சிவந்தது 
அந்த 
வெண்ணிற வானம்...!

செந்நிற மேகங்கள் 
சூழ 
கொட்டியது அங்கு மழை...!

மழை நீர் விழுந்து 
நிலம் 
நனைத்த போதிலும் 
வளம் இல்லை...!

ஆம்...!
நீர் நனைத்தும் 
வளப்படாத
அந்த அதிசய தேசம்...
ஏழையின் கன்னம்...!

பசி என்னும் 
தட்பவெட்பம் 
மாற்றிய வானிலையில் 
உருவான கண்ணீர் மழை...!

வானக் கண்களில் 
உருவாகி 
கன்ன  தேசத்தில்
பெய்த 
சுட்ட மழை
அது...!

வறுமையின் பிள்ளைகள் 
ஏராளம் 
இங்கு...!
இவர்கள் உடம்பில் 
எஞ்சியது 
உயிரில் ஒரு பங்கு...!

சுவாசத்தின் சூட்டிலும் 
கண்ணீரின் சூட்டிலும் 
உயிர் வாழும் 
ஏழை எஜமான்கள் இவர்கள்...!

வயிற்றில் வெறுமையும்
பார்வையில் கருமையும் 
வாழ்க்கையில் வறுமையுமே 
இன்றுவரை 
இவர்களின் உடைமை...!

இந்த நிலையம் மாறும்...!
ஆனால்  
அதுவரை இவர்கள் 
உண்ணுவதை 
மறவாமல் இருந்தால் 
மகிழ்ச்சி...!

இயற்கை அன்னையின் 
தராசு சமம் 
என்பதை அறியும் 
வேளையில் 
தற்கொலைக்கு 
முயல்வாள்
அவள் என்பதில் ஐயமில்லை...!

                                  .............. தாமரையான் !

Friday, June 11, 2010

விண்ணை தாண்டியவள்...!



என்றுமல்லாமல் 
அன்று ஒரு நாள்....!
இலகுவான 
மாலைப் பொழுது...!

இயற்கையின் மடியில் 
அயர்ந்திருந்த  
நான்....
விண்ணை நோக்கியபடியே.....!

தென்றலென காற்று....
கோலமிட்ட பறவைகள்....
தொலைவில் ஆதவன்....
ரசித்தேன் 
அனைத்தையும்...!

சட்டென ஒரு நொடி....!
புயலென மாறிய 
காற்று....!
வழிவிட்டு ஒதுங்கிய 
பறவைகள்...!

கருப்பன் என் 
உடல் 
வெந்து 
தேறியது சூட்டில்....!

ஆ... ஆச்சரியம்!
மேகத்தை கிழித்து 
கொண்டு....
வெண்ணிற ரெக்கையுடன்
தரை இறங்கிய 
தேவதை....!

இம்மண்ணில்  எவரையும் 
காணாமல்...
நேராய் வந்தாள்
என்னருகே....!

செய்வதறியாது 
திகைத்து நின்றேன்....!
சட்டென 
நின்றாள் என்னருகே....!

உலகமே துச்சம் 
என்பது போல்....
அவள் அழகில் 
என் கர்வம் 
தலைக்கேறியது....!


நிமிடமுள்ளும் 
நேரமுள்ளும் 
முட்டிக்கொண்டு நின்றது 
அவள் அழகில்....!
நொடிமுள்ளாய் நான்...!

கருப்பனுக்கு இத்தனை
குடுப்பினையா?..
என 
இங்கு பலர் வயிற்றில் 
சூரியனின் 
பின்பம்....!

பார்த்த உடன் காதல் 
என்பதில்  
நம்பிக்கை இல்லை....
அன்று வரை...!

காற்றை துரிதப்படுதினேன்...
அவளுடன் 
உரையாட....!
திடீரென ஒரு அதிர்ச்சி...!
வந்தவள் 
சென்றாள் வந்த வேகத்தில்...!

ஆனால்.....
அவள் என்னிடம் 
வந்ததற்கான 
சான்றுகள் மட்டும்.....
என் உடம்பில்....!
விட்டு விட்டு வரைந்த 
வெள்ளை கோடுகளாய்....!

கட்டாயம் மீண்டும் 
வருவாள் 
என காத்திருக்கிறேன் 
இயற்க்கை அன்னையின் மடியில்
சான்றுகளுடன்...!

                                           ------ விமான ஓடு தளம் !